பிறேமன் ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயம்
Ilse-kaisen Str 24, 28327 Bremen
Tel : 0421 24 79 66 58
திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபிலே பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி நூல்களையும் மருத்துவ நூல்களையும் கற்று விளங்கினார். யானை எற்றம், குதிரை ஏற்றம், வாட்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனை நாளும் வணங்கி வந்தார். அவர் சோழநாட்டை ஆண்ட…
திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். எப்போதும் போல் நந்தவனத்திற்கு மலர் கொய்யச்…
திருமருகலின் வேளான் குடியில் பிறந்தார் செருத்துணையர். சிவனிடத்தும் சிவ அடியாரிடத்தும் மெய்த்தொண்டு பூண்டு வழ்ந்தார். திருவாரூர் கோவிலின் முன்பு விளங்கும் பணிகளைச் செய்து வந்தார். ஆறு காலமும் பெருமானை வழிபட்டு தன்னால் முடிந்த தொண்டுகளைச் செய்துவந்தார். கழற்சிங்க மன்னன் திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார்….
அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூரினர். நாளடைவில் அது சோமாசிமாறர் என்றாயிற்று. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசனுக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் எனும் இயல்பினர். சிந்தை தெளிய சிவனின் ஐந்தெழுத்தை ஓதுவார்….
திருவாருரில் பிறந்தவர் தண்டி. சிவனின் சிந்தனையைத்தவிர வேறு எதையும் நினையாதவர். அகம் நோக்குவதைத் தவிற புறம் நோக்கி அறியா இவ்வடியாருக்கு பிறவியிலேயே கண் தெரியாது, திருவாரூர் மேற்குப்பகுதியில் உள்ளது கமலாலயம் திருக்குளம். தண்டியார் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டு கோவிலை வலம் வருவார்….
காஞ்சிமாநகரில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொணடர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர். உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல்…
சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தர்-க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே…
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார். வேளான் குடித்தலைவரான…
வயல் வழம் கொழிக்கும் மாட மாளிகைகள் நிறைந்த ஆதனூரில் பிறந்தார் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். சிவன்பால் சிந்தை கொண்டிருந்தார். செம்மையான சிந்தனையில் வேறு நினைப்பின்றி ஈசன் திருப்பணியை தமக்கு ஏற்ற…
தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்- திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது நீலகண்டம் எனச் சொல்லித் திருவோடு வழங்குவது வழக்கம். தெய்வ நலமே சிறந்த நலம் என வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்வு இனிது நடைபெற்றது….