- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை அடைந்தனர். நீலகண்டயாழ்ப்பாணர் தம்பிறப்பால் உள்ளே சென்று பாடமுடியாத நிலையில் கோவிலின் வாயிலிலே யாழிசைத்து மெய்யுருக பாடினார். அந்த இசை கேட்டு மகிழ்ந்த இறைவன் இரவு தொண்டர் கனவில் தோன்றி யாழ்ப்பாணரை தமது திருமுன் கொண்டுவந்து பாட பணித்தான். பாணர் கணவிலும் தோன்றி பணித்தான். இறைவன் புகழை பண்ணிசைத்து பாடினான். தரை ஈரமாயிருந்தது. இறைவன் அசரீரியாக தரையில் கீதம் தாக்குமானால் சந்தயாழ் நரம்பு தளர்ந்து நெகிலும் எனவே பாணர்க்கு பலகையிடுமாறு கூறினான்.
பலதலங்களில் யாழிட்டு புகழ்பாடி வணங்கி இசைத்தொண்டு செய்து இருவரும் சீர்காழி வந்தனர். சம்பந்தப்பெருமான் தன் பாடல்களுக்கு யாழில் இசை கூட்டச் சொன்னார். அவருடன் இருந்து தம் தொண்டினை செய்து ஞானசம்பந்தருடன் நல்லூர் பெருமனத்தில் சிவ ஜோதியில் கலந்தார்கள்.